காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை துப்பாக்கி முனையில் கைது செய்து என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி தியாகராஜன் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியான இவரை கைது செய்த போலீசார் குடும்பத்தாரிடம் எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் தலைமறைவாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தியாகராஜனை என்கவுண்டரில் சுட்டுத் தள்ள போலீசார் திட்டமிட்டிருப்பதாக அவரது மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் புகார் அளித்தார்.