திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீகாருக்கு அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உடற்கூறாய்வு அறையில் பிரேத பரிசோதனை முடிந்து வெங்கல் பகுதிக்கு செல்ல வேண்டிய வடமாநில தொழிலாளியின் சடலத்தை திருத்தணி பகுதிக்கும் திருத்தணி பகுதிக்கு செல்ல வேண்டிய கூலித் தொழிலாளி சடலத்தை வெங்கல் கிராமத்திற்கும் மாற்றி அனுப்பி வைத்துள்ளனர்.
திருத்தணியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரனின் சடலம் பிறகு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூலித் தொழிலாளி ராஜேந்திரனின் சடலத்தை மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்படுதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.