ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதனால், அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், தற்போது 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய அதிபர் டிரம்ப் தடைவிதித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், லிபியா, பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவில் பயணிப்பதை தடை செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய 7 நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.