உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு – 100 கி.மீ சைக்கிள் பயணத்தை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அண்ணாமலை மேற்கொண்டார்.
இன்று #உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் நாம், தூய்மையான மற்றும் பசுமையான சூழலைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்குக் கடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், தூய்மையான, பசுமையான பாரதத்திற்கான விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, 100 கி.மீ சைக்கிள் ஓட்டுதல் சவாலை இன்று மேற்கொண்டதாக அண்ணாமலை கூறியுள்ளார்.