திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிப்பட்டு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி முடிந்து சென்ற மாணவர்கள் பேருந்தில் போதிய இடம் இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.