நெல்லை அருகே நான்கு நாட்களாகக் குடிநீர் விநியோகம் இல்லாமல் மலையடிவார கிராம மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குப்பட்ட அனவன்குடியிருப்பு அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் இருந்து குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.