மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை தாம்பரத்தில் உள்ள ராஜ் கீழ்பாக்கம் ஏரி கரையில் பாஜக சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகிகளான அரவிந்த் மேனன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு பாஜக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ரசாயன உணவுகளை உட்கொள்வதால் மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டு வருவதாகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதே சரியான தீர்வாக இருக்கும் எனவும் கூறினார்.
பிரதமர் மோடியின் தலைமையிலான 11 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தேமுதிக கூட்டணி தொடர்பான கேள்விக்கு இன்னும் காலம் இருக்கிறது என பதிலளித்தார்.
பகல்ஹாமில் 26 பேர் சுட்டுக்கொல்பட்டது பாதிப்பு இல்லையா? என்றும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது பாதிப்பு இல்லையா? என்றும் திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு கேள்வி எழுப்பினார்.