ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசுப்பதவிகளை ஏற்க மாட்டேன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வட்ட மேசை விவாதத்தில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய பி.ஆர்.கவாய், நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் அரசுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேர்தலில் போட்டியிடுவது போன்ற செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது எனத் தெரிவித்தார்.