பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ரா ரயில் நிலையத்தில் அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி கத்ரா ரயில் நிலையம் மற்றும் வந்தே பாரத் ரயிலை அதிகாரிகள் இருவரும் பார்வையிட்டனர்.
ரயிலில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி ரயில்வே துறையினரிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.