பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு RCB அணி சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபி அணி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், RCB அணி சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துயர சம்பவம் பெரும் கவலை அளிப்பதாக அந்த அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.