உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
புனிதத் தலமாகக் கருதப்படும் சரயு நதிக்கரைக்குச் சென்ற அவர் நதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார். பின்னர் நதியில் மலர் தூவி, பால் ஊற்றிச் சிறப்புப் பூஜைகள் செய்தார்.