திருப்பதி அலிபிரியில் 10 கவுண்டர்கள் மூலம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சீனிவாச மங்காபுரத்தில் நிரந்தர டிக்கெட் கவுண்டர் அமைக்க தேவஸ்தான் அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான அனுமதி வேண்டி மத்திய தொல்லியல் துறையினருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அனுமதி கிடைக்க தாமதாகி வரும் நிலையில் தற்காலிகமாக இந்த டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 4 கவுண்டர்கள் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்காகவும், 6 கவுண்டர்கள் நேர ஒதுக்கீட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கவும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.