சத்தீஸ்கரில் சேறு நிறைந்த குழியில் விழுந்த ஆண் குட்டி யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
ராய்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சேறு நிறைந்த குழிக்குள் ஆண் குட்டி யானை விழுந்திருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடம் வந்த வனத்துறையினர் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் 50 மணி நேரம் போராடி, குழிக்கு அருகே ஒரு பாதை அமைத்து குழிக்குள் சிக்கி தவித்த குட்டி யானையைப் பாதுகாப்பாக மீட்டனர்.
இது தொடர்பான வீடியோவை அம்மாநில வனத்துறை வெளியிட்டுள்ள நிலையில் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.