இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!
Jan 14, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

Murugesan M by Murugesan M
Jun 8, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவின் S 400 மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பான AKASHTEER ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வைத்திருக்கும் இந்தியா மற்றுமொரு AIR DEFENCE சிஸ்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மன்னராட்சி காலம் முதல் தற்போது வரை போர் முறைகள் மாறிக்கொண்டே வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தாக்குதலின் வடிவங்களும் வேறுபடுகின்றன. அந்த வகையில் தற்போது DRONE-களைக் கொண்டு தாக்குவதுதான் அதிகம் பின்பற்றப்படும் போர் முறையாக இருக்கிறது. எனவே அனைத்து நாடுகளும் தங்களது வான் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை அதிக உயரத்தில் பறந்து வரும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுக்க ரஷ்யாவின் S 400 வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்துகிறது. ஆனால் குறைந்த உயரத்தில் பறந்து வரும் ட்ரோன்களை S 400-ஆல் கண்டறிய முடியாது. அதனால் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட AKASHTEER வான் பாதுகாப்பு அமைப்பையும் இந்தியா பயன்படுத்தி வருகிறது. குறைந்த உயரத்தில் பறந்து வரும் DRONE-களையும் AKASHTEER எளிதாக அழித்துவிடும்.

இப்படி வான் பாதுகாப்பில் UPDATE-ஆக இருக்கும் இந்தியா, ‘KUSHA’ என்ற பெயரில் புதிய AIR DEFENCE சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது. 350 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பறந்து வரும் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் DRONE-களை கண்டறிந்து அழிக்கும் சக்தி படைத்தது KUSHA. பிறநாடுகளிடம் இருந்து தளவாடங்களை வாங்குவதைவிடத் தொழில்நுட்பத்திலும் சுதந்திரமாகச் செயல்படவே இந்தியா விரும்புகிறது.

அதன் ஒருபகுதியாக 2022-ஆம் ஆண்டில் KUSHA திட்டத்தை DRDO தொடங்கியது. 150 கிலோ மீட்டர், 250 கிலோ மீட்டர், 350 கிலோ மீட்டர் என மூன்று LAYER-களைக் கொண்டது KUSHA. இந்த தொலைவுக்குள் எதிரி நாட்டு விமானங்களோ, DRONE-களோ வந்தால் KUSHA அழித்துவிடும்.

2028 அல்லது 2029-ஆம் ஆண்டு KUSHA பயன்பாட்டுக்கு வரும் எனக்கூறப்படுகிறது. அதன்பிறகு LONG RANGE வான் பாதுகாப்பு அமைப்பைச் சொந்தமாக உருவாக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துவிடும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்பை வைத்துள்ளன.

தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடு என்று கூறப்படும் இஸ்ரேல் வைத்துள்ள ‘IRON DOME’ வான் பாதுகாப்பு அமைப்பு 70 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வரும் எதிரி விமானங்களை மட்டுமே தடுக்கும். அதேபோல் அமெரிக்க வைத்திருக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு 110 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வரும் எதிரி ஏவுகணைகளை மட்டுமே தடுக்கும். ஆனால் இந்தியா உருவாக்கி வரும் KUSHA, 350 கிலோ மீட்டர் தொலைவு வரை எதிரிகளின் தாக்குதலைத் தடுக்கக்கூடியது. இதன்மூலம் வான் பாதுகாப்பில் வல்லரசு நாடுகளை இந்தியா தாண்டிவிடும்.

Tags: S-400 வான் பாதுகாப்புIndia's 'PROJECT KUSHA': Surpassing superpowers in airspace securityஇந்தியாவின் ‘PROJECT KUSHA’
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies