இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!
Sep 14, 2026, 01:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

Murugesan M by Murugesan M
Jun 8, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவின் S 400 மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பான AKASHTEER ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வைத்திருக்கும் இந்தியா மற்றுமொரு AIR DEFENCE சிஸ்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மன்னராட்சி காலம் முதல் தற்போது வரை போர் முறைகள் மாறிக்கொண்டே வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தாக்குதலின் வடிவங்களும் வேறுபடுகின்றன. அந்த வகையில் தற்போது DRONE-களைக் கொண்டு தாக்குவதுதான் அதிகம் பின்பற்றப்படும் போர் முறையாக இருக்கிறது. எனவே அனைத்து நாடுகளும் தங்களது வான் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை அதிக உயரத்தில் பறந்து வரும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுக்க ரஷ்யாவின் S 400 வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்துகிறது. ஆனால் குறைந்த உயரத்தில் பறந்து வரும் ட்ரோன்களை S 400-ஆல் கண்டறிய முடியாது. அதனால் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட AKASHTEER வான் பாதுகாப்பு அமைப்பையும் இந்தியா பயன்படுத்தி வருகிறது. குறைந்த உயரத்தில் பறந்து வரும் DRONE-களையும் AKASHTEER எளிதாக அழித்துவிடும்.

இப்படி வான் பாதுகாப்பில் UPDATE-ஆக இருக்கும் இந்தியா, ‘KUSHA’ என்ற பெயரில் புதிய AIR DEFENCE சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது. 350 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பறந்து வரும் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் DRONE-களை கண்டறிந்து அழிக்கும் சக்தி படைத்தது KUSHA. பிறநாடுகளிடம் இருந்து தளவாடங்களை வாங்குவதைவிடத் தொழில்நுட்பத்திலும் சுதந்திரமாகச் செயல்படவே இந்தியா விரும்புகிறது.

அதன் ஒருபகுதியாக 2022-ஆம் ஆண்டில் KUSHA திட்டத்தை DRDO தொடங்கியது. 150 கிலோ மீட்டர், 250 கிலோ மீட்டர், 350 கிலோ மீட்டர் என மூன்று LAYER-களைக் கொண்டது KUSHA. இந்த தொலைவுக்குள் எதிரி நாட்டு விமானங்களோ, DRONE-களோ வந்தால் KUSHA அழித்துவிடும்.

2028 அல்லது 2029-ஆம் ஆண்டு KUSHA பயன்பாட்டுக்கு வரும் எனக்கூறப்படுகிறது. அதன்பிறகு LONG RANGE வான் பாதுகாப்பு அமைப்பைச் சொந்தமாக உருவாக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துவிடும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்பை வைத்துள்ளன.

தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடு என்று கூறப்படும் இஸ்ரேல் வைத்துள்ள ‘IRON DOME’ வான் பாதுகாப்பு அமைப்பு 70 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வரும் எதிரி விமானங்களை மட்டுமே தடுக்கும். அதேபோல் அமெரிக்க வைத்திருக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு 110 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வரும் எதிரி ஏவுகணைகளை மட்டுமே தடுக்கும். ஆனால் இந்தியா உருவாக்கி வரும் KUSHA, 350 கிலோ மீட்டர் தொலைவு வரை எதிரிகளின் தாக்குதலைத் தடுக்கக்கூடியது. இதன்மூலம் வான் பாதுகாப்பில் வல்லரசு நாடுகளை இந்தியா தாண்டிவிடும்.

Tags: S-400 வான் பாதுகாப்புIndia's 'PROJECT KUSHA': Surpassing superpowers in airspace securityஇந்தியாவின் ‘PROJECT KUSHA’
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies