பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, பெங்களூரு மாநகர காவல் ஆணையர், சின்னசாமி கிரிக்கெட் மைதான பொறுப்பாளர், காவல் நிலைய அதிகாரி, காவல் நிலையப் பொறுப்பாளர் உள்ளிட்ட 5 பேரை சஸ்பெண்ட் செய்து முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணை சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.