பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!
Jun 14, 2026, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 6, 2025, 06:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் தொடர்பாக  அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விழாவின்போது ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும், எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் கர்நாடக அரசு விளக்கம் அளித்தது.

மேலும், வெற்றி விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் இரண்டரை லட்சம் பேர் மைதானத்தில் திரண்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே இந்த விவகாரத்தில் ஆர்.சி.பி. நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த DNA எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மீதும் பெங்களூரு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. அணி தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான எக்ஸ் தளப் பதிவில், பெங்களூருவில் நேற்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ரசிகர்களுக்கு உதவ RCB கேர்ஸ் என்ற நிதி திரட்டும் அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆர்.சி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Bengaluru City Police Commissionerkarnataka high courtchief Minister SiddaramaiahChinnaswamy StadiumBengaluru stampedeRCB team
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காவல் ஆணையர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்!

Next Post

கோயில் திருவிழா தொடர்பான சர்ச்சை பேச்சு – அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies