மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயில் காரணமாக உப்பு உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமாக 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன.
இந்த உப்பளங்களில் இருந்து ஆண்டு தோறும் சுமார் 25 லட்சம் டன் முதல் 30 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வெயில் காலத்தில் உப்பு உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பதால் கடந்த ஜனவரி மாதம் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி துவங்கியது.
நடப்பாண்டு வழக்கத்திற்கு மாறாகக் கோடை வெயில் அதிகரித்துக் காணப்படுவதால், உப்பு உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருவதாக உப்பள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உப்பு உற்பத்தி தொடர்பான ட்ரோன் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.