தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பிரகாஷ் புகார் மனு அளித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த அவர், தமிழக தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், முறைகேடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்தும் ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.
பாரதிய மஸ்தூர் சங்கம் தெரிவித்துள்ள பிரச்சனைகள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பிரகாஷ் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.