கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சாலையோரம் நின்ற கார், அஜாக்கிரதையாகத் திரும்பியபோது நிகழ்ந்த வாகன விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் சிறுமுகையைச் சேர்ந்த அருள் முருகன், கண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். புத்தர் நகர் அருகே சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென திரும்பியுள்ளது.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம், கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த 2 இளைஞர்களையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.gff