திருச்சியில் கடன் வழங்கியதில் மோசடியில் ஈடுபட்டதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிந்தாமணி பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் ரவிச்சந்திரன் என்பவரும் ராஜாராம் என்பவரும் இணைந்து சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் வழங்குவதில் மோசடி செய்வதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதைக் கண்டறிந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம் இருவருக்கும் சிறைதண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.