ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு, சாலையில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாகச் சுண்ணாம்பு பவுடர் போடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அகில் மேடு வீதியில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கட்டணமில்லா அப்பா கணினி பயிற்சிக் கூடமானது திறக்கப்பட உள்ளது.
இதனை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்நிலையில், சாலையில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாகச் சுண்ணாம்பு பவுடர் போடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, முறைப்படி சாலையில் போடப்படக்கூடிய கிருமி நாசினி ப்ளீச்சிங் பவுடர்களை போட வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.