உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி மதுரையில் மத்திய பாதுகாப்பு படையினரின் ஒத்திகை நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு, இரவு மதுரை வருகிறார். பின்னர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார்.
நாளை பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அமித் ஷா, பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு, விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் ஒத்தக்கடை வரை மத்திய பாதுகாப்பு படையினர், ஒத்திகையில் ஈடுபட்டனர்.