நெல்லை தாமிரபரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் கையாடல் செய்ததாக 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகை அருகே தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனையில் அரசு பேருந்துகளுக்கு டீசல் நிரப்பியதில் குளறுபடி ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 25 ஆயிரம் லிட்டர் டீசல் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த முறைகேடு குறித்து மண்டல போக்குவரத்து மேலாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து விசாரணையானது மண்டல போக்குவரத்து மேலாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிமனைகளிலும் டீசல் வினியோகத்தில் சிசிடிவி கண்காணிப்பு, டிஜிட்டல் பதிவு முறைகள், டேட்டா ஆடிட் ஆகியவை ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில் எப்படி 25,000 லிட்டர் டீசல் திருடு போனது என்பது குறித்து அரசு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.