திருச்செந்தூரில் கூலித்தொழிலாளியை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் - இளைஞர்கள் சாலை மறியல்!
Jun 7, 2025, 09:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூரில் கூலித்தொழிலாளியை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் – இளைஞர்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Jun 7, 2025, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கூலித் தொழிலாளியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள வீர மகேந்திர கோட்டை தெருவை சேர்ந்தவர் பெயிண்டிங் கூலி தொழிலாளியான பட்டு இசக்கி. இவர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள டீக்கடை அருகே ஊதியம் வாங்குவதற்காக சக பணியாளர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சதீஷ், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நின்றுகொண்டிருக்கும் இருசக்கர வாகனத்திற்கு எதற்கு அபராதம் விதிக்கிறீர்கள் எனக்கேட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் சதீஷ் இருசக்கர வாகனங்கள் மீதிருந்த உணவு பைகளை தட்டிவிட்டதுடன், கூலி தொழிலாளியான பட்டு இசக்கியை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதையடுத்து சக பணியாளர்களும், அப்பகுதி மக்களும் போக்குவரத்து உதவி ஆய்வாளரை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் சம்மந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: Thoothukuditraffic inspector slapped labourVeera Mahendra Kotta Streettiruchendur
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம்!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies