கோவையில் இசைஞானி இளையராஜாவை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கோவையில், இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாஅவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடப்பதாக தெரிவித்துள்ளார்
நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.