மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மதுரை வருகையை ஒட்டி விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள வேலம்மாள் திடலில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றிரவு 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து மதுரை வரவுள்ளார்.
பின்னர் சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, நாளை காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ளவுள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.