விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய வழக்கின் விசாரணையை மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு நெல்லை அம்பாசமுத்திரம் அருகே சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் உட்பட 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் வழக்கானது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்ததையடுத்து நீதிமன்றத்தில் பல்வீர் சிங் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று வழக்கை மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.