மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்புப் படையினர் வங்கதேச எல்லை காவல் படையினருடன் இனிப்புகளைப் பரிமாறி பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர்.
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைக்குரியில் இந்தியா-வங்கதேச எல்லையில் உள்ள ஃபுல்பாரியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் வங்கதேச எல்லைக் காவல் படையினருக்கு இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.