இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 364ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 764 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாகக் கேரளாவில் 192 பேரும், மகாராஷ்டிராவில் 107 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவால் 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.