கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்குச் சேவை செய்வது தங்களுக்குக் கிடைத்த பாக்கியம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், கடந்த 11 ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்துள்ள அவர், மண் ஆரோக்கியம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாகப் பதிவிட்டுள்ளார்.
விவசாயிகள் நலனுக்கான தங்கள் முயற்சி வரும் காலங்களில் அதிக வீரியத்துடன் தொடரும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.