மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை - காணாமல் போன மனைவி!
Jan 14, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

Murugesan M by Murugesan M
Jun 7, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேகாலயாவில் தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருந்த கணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த புதுமணத் தம்பதியர்? என்ன நடந்தது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தூரைச் சேர்ந்த 28 வயதான ராஜா ரகுவன்ஷி மற்றும் 24 வயதான சோனம் ஆகியோருக்கு கடந்த மே 11 ஆம் தேதி தான் திருமணம் நடந்தது. கடந்த மே 20 ஆம் தேதி தேனிலவுக்காகப் புதுமணத் தம்பதியர் மேகாலயாவுக்குச் சுற்றுலா சென்றனர்.

Insta  சமூக ஊடகத்தில் பிரபலமாக்கப்பட்ட மேகலாயாவின் Living  Root Bridges என்ற இடத்தைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டனர். Travels தொழிலில் ராஜா இருந்ததால், செல்லும் இடங்கள் பற்றிய முழு தகவல்களையும்  சேகரித்துக் கொண்டு, தங்கள் தேனிலவு பயணத்தை மிகக் கவனமாகத் திட்டமிட்டனர்.

குவஹாத்தி வழியாக ஷில்லாங்கிற்கு வந்த இந்த தம்பதியர் அங்கிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில்  உள்ள சிரபுஞ்சிக்குச் சென்றனர்.  கடந்த மே 22 ஆம் தேதி, மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகத் தூய்மையான கிராமம் என்று கூறப்படும் Mawlynnong  மவுலியாக்கியாட்  கிராமத்துக்கு வந்தனர்.

அங்கிருந்து Nongriat நோங்கிரியாட் என்னும் கிராமத்துக்குச் சென்றனர். பிறகு அந்த கிராமத்தில் உள்ள தனியார் விருந்தினர் இல்லத்தில் புதுமணத் தம்பதியர் தங்கினர். மறுநாள் காலை, அங்கிருந்து கிளம்பிய புதுமணத் தம்பதியரின் தொலைப்பேசி SWITCH OFF செய்யப் பட்டிருந்தது. இது குறித்து, அவர்களுடைய குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

கடந்த மே 24 ஆம் தேதி புதுமணத் தம்பதியர் வாடகைக்கு எடுத்திருந்த ஸ்கூட்டர், ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சி இடையே கண்டெடுக்கப்பட்டது.  ஸ்கூட்டரில் உள்ள GPS மூலம் அவர்கள் Wei Sawdong அருவி உள்ள பகுதியை நோக்கிச் சென்றதைக் காட்டியது.

காணாமல் போன 8 நாட்களுக்குப் பிறகு, அருவிக்கு அருகே ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ஒரு  உடல் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப் பட்ட உடலின் கையில் “ராஜா” என்ற பெயர்  பச்சை குத்தியிருந்ததை வைத்தும் மணிக்கட்டில் இருந்த ஸ்மார்ட் வாட்சை வைத்தும், ராஜாவின் சகோதரர், உடலை அடையாளம் காட்டியுள்ளார்.

பழங்குடியினர் பயன்படுத்தும்  DAO டாவ் எனும் கத்தியால் ராஜா கொலை செய்யப்பட்டதை உறுதிப் படுத்திய  காவல் துறையின்  சிறப்புப் புலனாய்வுக் குழு, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் ராஜாவின் செல்போனையும் கைப்பற்றியுள்ளது.

கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், ராஜாவின் கழுத்தில் இருந்த செயின்,மோதிரங்கள், பர்ஸ், காணாமல் போயிருந்தன. மேகலாயாவில் 500 மில்லிமீட்டர்  மழைப்பொழிவு பதிவாகி மோசமாக  வானிலை இருப்பதால், தேடுதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தம்பதியரின் குடும்பத்தினர் சிபிஐ விசாரிக்க  வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தூரில் ராஜாவுக்கு நீதிகேட்டு, நான் இறக்கவில்லை; கொல்லப்பட்டேன்; சிபிஐ விசாரணை வேண்டும்; மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்ளும் ராஜாவின் ஆன்மா என்ற  வாசகங்கள்  அடங்கிய பெரிய சுவரொட்டிகள் வெளியிடப் பட்டுள்ளது.

ராஜாவின் உடலைக் கண்டுபிடித்த போதிலும், அவரது மனைவி சோனம் என்ன ஆனார் ? அவர் கடத்தப்பட்டாரா ? என்ற கேள்விக்கு இன்னும் விடைதெரியவில்லை. தேனிலவு தம்பதியரைக் குறிவைத்து, கணவரைக் கொன்றுவிட்டு இளம் மனைவியரைக்  கடத்தும் ஒரு கும்பல் அந்தப் பகுதியில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, கடந்த மாதம், மற்றொரு புதுமண ஜோடி காணாமல் போனதாகவும், ஒரு வெளிநாட்டவர் கொலை செய்யப்பட்டதாகவும், இது குறித்த புகார்களை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை என்றும் உள்ளூர் மக்கள் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: Mysterious honeymoon: Husband brutally murdered - wife missingகொடூரமாக கணவன் கொலைமர்மம் நிறைந்த தேனிலவு
ShareTweetSendShare
Previous Post

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

Next Post

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies