கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவு பேருந்துகள் இல்லாததால் சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளானதற்காக, திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திட்டமிடல் இன்றி திறந்து, திமுக அரசு மக்களை அவதியடையச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை எனத் தெரிவித்துள்ள அவர், பக்ரித், முகூர்த்த நாள், வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்குத் தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொந்த ஊருக்குச் செல்லக்கூட ஸ்டாலின் மாடல் அரசு மக்களைப் பரிதவிக்க வைப்பதாகக் கூறியுள்ள இபிஎஸ், கிளாம்பாக்கம் முனையத்தில் போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.