சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலி நிலம் வைத்துள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, காலி நிலத்தில் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அடிக்கடி அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
நிலத்தில் நீர் தேங்காமலிருக்க வடிகால் அமைத்துப் பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளைத் தடுக்க காலி நிலத்தில் எல்லையைச் சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை நில உரிமையாளர்கள் பின்பற்றவில்லை எனில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.