முருக பக்தர்கள் மாநாட்டைபாஜகவால் உலகளவில் நடத்த முடியும் என, காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகைக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
மகாராணி அகல்யா பாய் ஓல்கரின் 300-வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றதை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மகாராணி அகல்யாபாய் ஓல்கருக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு அறக்கட்டளையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது அவரிடம் பாஜகவால் முருக பக்தர்கள் மாநாட்டை வேறு மாநிலங்களில் நடத்த முடியுமா என செல்வப்பெருந்தகை வினவியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பாஜகவால் முருக பக்தர்கள் மாநாட்டை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடத்த முடியும் என கூறினார்.