விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் இருந்த 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன.
கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் இருந்து பாம்புகள் வெளியே வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு, உடனடியாக தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சென்ற அவர்கள், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து நல்ல பாம்பு, சாரை பாம்பு மற்றும் அதன் குட்டிகள் என 10-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துச் சென்றனர்.