மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்ற மதுரை ஆதீனம், இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இலங்கையில் உள்ள தமிழர்களின் படகுகளை மீட்க வேண்டும் என்றும இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அவர் மனு ஒன்றையும் வழங்கினார்.