ஹைதராபாத் அருகே ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தெலுங்கானாவைச் சேர்ந்த பத்டினி குடும்பத்தினர் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீன் மருந்து பிரசாதத்தை வழங்கி வருகின்றனர்.
நடப்பாண்டுக்கான மீன் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நம்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை அம்மாநில சபாநாயகர் பிரசாத் குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு உயிருடன் உள்ள மீனுடன் சேர்த்து நாட்டு மருந்து வழங்கப்பட்டது.