ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் இந்தியக் கடற்படை விமான தளத்தில் 104 வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு நடைபெற்றது.
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி இந்தியக் கடற்படை விமான தளத்தில் ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி பள்ளியில் 18 வீரர்கள் வெற்றிகரமாகப் பயிற்சி முடித்துள்ளனர்.
பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கிழக்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி, தலைமை தளபதி, வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தகர் கலந்து கொண்டு அணிவகுப்பை மரியாதை ஏற்றுப் பட்டங்களை வழங்கினார்.