கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு செய்த பணிகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள நட்டா, 2014-க்கு முன்பு, முந்தைய அரசாங்கம் ஊழலால் நிறைந்திருந்தது என்றும் நாடு முழுவதும் ஒரு எதிர்மறை உணர்வு நிலவியது எனவும் தெரிவித்தார்.
ஆனால் 2014-க்குப் பிறகு, பிரதமர் மோடியின் தலைமையில் அந்த உணர்வு மாறியது எனவும் அவர் கூறினார்.
மேலும், இப்போது மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம் என மக்கள் பெருமையுடன் கூறுவதாகவும் ஜெ. பி. நட்டா தெரிவித்தார்.