கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 7 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக – கர்நாடக பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாகக் காணப்பட்ட நீர்வரத்து, தற்போது 7 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது.
கனமழை காரணமாக மேலும் நீர்வரத்து அதிகரிக்கக் கூடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நீர்வரத்து நிலவரங்களை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.