உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சான்டோஸ் கால்பந்து அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அணியின் அனைத்து வித நடவடிக்கைகளிலிருந்தும் நெய்மர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் எனவும் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கவலை அடைந்துள்ள ரசிகர்கள், அவர் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.