சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் ஐஇடி குண்டுவெடிப்பில் வீரமரணமடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவின் இறுதிச்சடங்கில் அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்டார்.
ராய்ப்பூரில் நடந்த இறுதிச் சடங்கில் துணை முதலமைச்சர்கள் விஜய் சர்மா, அருண் சாவ் மற்றும் சட்டமன்ற சபாநாயகர் ராமன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதிச்சடங்கின்போது ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சேவின் சடலத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் சுமந்து சென்றனர்.