மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மேற்பார்வையிட்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில், சில மாதங்களுக்கு முன்னர் ஆடு, கோழி உள்ளிட்டவற்றைப் பலியிட முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்துக் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வரும் 22-ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப் போவதாக இந்து முன்னணி அறிவித்தது.
இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் முகப்பு தோற்றம் கொண்ட மாதிரிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மேற்பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.