சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த காற்றுடன் கூடிய கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது. ஈசிஆர் சாலை, நீலாங்கரை, கொட்டிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. அயப்பாக்கத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து 174 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் தரையிரங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதேபோல திருச்சியில் இருந்து வந்த விமானமும் திருப்பி அனுப்பப்பட்டது.