சேலம் மாவட்டம், கவுண்டம்பட்டியில் சிறுவனை நாய்கள் துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது.
கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் சிலர் தமது வளர்ப்பு நாய்களை கட்டிப்போடாமல் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற சிறுவன் ஒருவனை, அந்த வளர்ப்பு நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளன.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கேள்வி எழுப்பிய நிலையில், அவரை நாய்களின் உரிமையாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாய்கள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகாரளித்தும், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே சிறுவனை நாய்கள் துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.