அதிமுக கூட்டணியைப் பார்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக-வை எதிர்கின்ற துணிச்சல் திமுக-விற்கு இல்லை எனவும், மதவாதம், இனவாதம் குறித்து அறிவுரை வழங்க திமுக-விற்கு யோக்கியதை இல்லை என்றும் தெரிவித்தார்.