புதுச்சேரி வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புதுச்சேரி மாநில வர்த்தக சபையில் நடைபெற்ற, அம்மாநில வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்ததாக தெரிவித்துளளார்.
இந்தக் கூட்டத்தின் போது, புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி , சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.பி.அசோக்பாபு , வி.பி.இராமலிங்கம் , க.வெங்கடேசன், .சிவசங்கரன் மற்றும் வணிகர்கள் ஏராளமானோர் உடன் கலந்து கொண்டதாக கூறியுள்ளார்.