நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் உள்ளே சென்று வெளி வரும் வகையில் சென்னை திருமங்கலத்தில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. 9 மாடிகளைக் கொண்ட 3 கட்டிடங்கள் கட்டப்படுகிறது.
இத்திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளைக் கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. வணிக கட்டிடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.