சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் நிக்கோலஸ் பூரன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
106 டி20 போட்டிகளில் விளையாடிய வீரராகவும், 2 ஆயிரத்து 275 ரன்கள் குவித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அத்துடன் 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 983 ரன்கள் குவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 2023 உலகக்கோப்பை தகுதி சுற்றில் தோல்வியடைந்ததிலிருந்து அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றுள்ளார்.